Friday, April 17, 2009

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! "விகடன்"

பதுங்கு குழியில் வாழ்க்கை கழியும்
உங்கள் உடலை சொந்தம் தேடும்
இய்ந்திரப்பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் எமனாவான்
உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்
பல முறை தீப்பிடிக்கும்
பார்த்துக்கொண்டே இருப்பீர்களா?
ஓரணியில் திரண்டு
ஒரே முடிவு எட்ப்பீர்களா?
உங்கள் அரசியல் விளையாட்டில்
எங்களை தோற்கடிக்காதீர்கள்
இந்த தாகம் இந்த சோகம்
இந்த இன அழிப்பு
இந்த பேரிழப்பு
எல்லாம் தமிழனுக்கு
வாய்த்த தலைவிதியா
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி
நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை
படுக்கையில் நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மர நிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களை வன்புணர்ந்து
பேய்கள் வெறி தீர்க்கும்
இரத்த ஆறு வழிந்தோடும்
நடுவில் நாய் நக்கும்
தலையில் செல் வந்து விழும்
வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத் தழிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ
உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை
உண்ர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும்
எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயை பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடுவிட்டு நாடு போய்
நரகத்தில் தொலைய முடியுமா?
ஈழத் தழிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளூம் கட்சிகள்
ஆட்சி இழந்தாலும்
அனைதுக் கட்சிகள்
௯ட்டம் நடந்தாலும்
தமிழகம் முழுவதும்
கடைகள் மூடப்பட்டாலும்
திரையுலகமே திரண்டு
பேரணியில் சென்றாலும்
இலக்கியத் தோப்பினுள்
எரிமலை எழுந்தாலும்
தனித்தனியாக நீங்கள்
உண்ணாவிரதம் இருந்தாலும்
எப்போதும் உங்களை
நெஞ்சினில் சுமக்கின்றோம்
தணியாத தாகமாய் விடுதலை கேட்க்கின்றோம்
ஈழத் தழிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

No comments: