Monday, June 22, 2009

வாழ்க்கை என்பது ....

வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல

ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை.

உன்
பேனாவைக் கூட
மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட

நீ
எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்.

இந்த உலகம் உனக்கு
சிறையல்ல நீதான்
கைதியாய் வாழ்கிறாய்.

நன்றி: கவிஞர் காசியானந்தனின் கவிதைகளில் இருந்து !!!!

Wednesday, June 17, 2009

நீ இங்கு வரும் வரை!!!

இப்படித்தான் நீ இல்லாமல்...
எல்லாமே இங்கு வெறும் கேள்வியாய்

இனிக்கும் உன் சிரிப்பை
ஒரு முறை சுவைக்கும் வரை...

இரக்கமில்லாத உன் இதழை
ஒரு முறை தண்டிக்கும் வரை...

மோகம் மறந்த உன் தாகத்தை
ஒரு முறை பருகும் வரை...

தொடுதல் மறந்த உன் தீண்டலில்
ஒரு முறை இருகும் வரை...

விரகம் மறந்த உன் வேர்வையில்
ஒரு முறை நனையும் வரை...

சுட்டு எரித்த உன் சுவாசத்தில்
ஒரு முறை எரியும் வரை...

உன் பார்வை பட்டு
ஒரு முறை நான் பக்குவம் ஆகும் வரை....

உன்னை சீண்டி விளையாடி
ஒரு முறை நான் சிந்தை தெளியும் வரை...

உன் மடிமேல் சாய்ந்து
ஒரு முறை என் மயக்கம் தீரும் வரை...

உன் மொழி அது ஒரு முறை
என் செவி கேட்கும் வரை...

நீ எனக்கு மட்டும் என்று சொல்லி
என்னை ஒருமுறை மறுமுறை....
மறுமுறை என்னை தழுவும் வரை...

என்னிடம் எல்லாமே கேள்விகள் தான்?
நீ இங்கு வரும் வரை!!!

Wednesday, June 10, 2009

வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று

உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ...
சமாதியோ... மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது..

Friday, June 5, 2009

முடியலையே....

தனித்திருந்த வாழ்க்கையது
கசத்திருந்த நாளொன்றில்
கண்ணெதிரே கண்டேன்
அந்தக் கள்ளியை - என்
நெஞ்சத்தைத் கொள்ளைகொண்ட
அன்புச் செல்வியை


தனியாகச் சிரித்ததில்லை
தலையணை மறந்ததில்லை
என்னவோ ஆச்சு எனக்கு
எங்கேயோ போச்சு மனது - ஆகா
நண்பர்கள் பட்ட துன்பம்
நான்படலானேனே இப்போது


உடுப்பது எடுக்கச் சென்றால்
உணவது அருந்தச் சென்றால்
தனியாகச் சிரித்துக்கொண்டேன்
கேட்டால் வெடுக்கென்று
முறைத்துக் கொண்டேன் -ஐயோ
இப்படி மாறிப்போனேனே


வாழ்க்கையின் வசந்தமிது
வந்தது எனக்குமிப்போ
கவிதைகளால் எல்லாம்
சொல்லத் தெரியலையே! - என்
கனவெல்லாம்
கீறிக் காட்டிட முடியலையே