மாங்கிளியும் மரம்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்ல
நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல
சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளி சொரியுது
எங்கள் உயிர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது
தாய் கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளை கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம் பிஞ்சுகளை அழிக்கிறான்
பெத்தவங்க ஊரிலே ஏங்குறாங்க பாசத்தில
எத்தனை நாள் காத்திருப்போம் அடுத்தவன் தேசத்தில
உண்ணவும் முடியுதில்ல உறங்கவும் முடியுதில்ல
எண்ணவும் முடியுதில்ல இன்னும்தான் விடியுதில்ல
கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில
கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல
வாழ்க்கை என்பது ....
16 years ago

No comments:
Post a Comment