Friday, June 5, 2009

முடியலையே....

தனித்திருந்த வாழ்க்கையது
கசத்திருந்த நாளொன்றில்
கண்ணெதிரே கண்டேன்
அந்தக் கள்ளியை - என்
நெஞ்சத்தைத் கொள்ளைகொண்ட
அன்புச் செல்வியை


தனியாகச் சிரித்ததில்லை
தலையணை மறந்ததில்லை
என்னவோ ஆச்சு எனக்கு
எங்கேயோ போச்சு மனது - ஆகா
நண்பர்கள் பட்ட துன்பம்
நான்படலானேனே இப்போது


உடுப்பது எடுக்கச் சென்றால்
உணவது அருந்தச் சென்றால்
தனியாகச் சிரித்துக்கொண்டேன்
கேட்டால் வெடுக்கென்று
முறைத்துக் கொண்டேன் -ஐயோ
இப்படி மாறிப்போனேனே


வாழ்க்கையின் வசந்தமிது
வந்தது எனக்குமிப்போ
கவிதைகளால் எல்லாம்
சொல்லத் தெரியலையே! - என்
கனவெல்லாம்
கீறிக் காட்டிட முடியலையே

No comments: