கவிதைகளை உடுத்திக் கொண்ட
வார்த்தைகள்
பாடல் ஆனது.
உன் நினைவுகளை
உடுத்திக்கொண்ட
என் மனது காதலானது.
உன்னை
எழுதுவதாலேயே
என் வார்த்தைகள் கவிதையானது.
ஆம்… நீ
நடந்து வரும் கவிதையல்லவா!!!
எனக்கு ஒரு சந்தேகம்…
நான் உன்னை
பார்த்த பிறகு வாங்கிய
எல்லா எழுதுகோலும்
உன்னை எழுதியிருக்கிறது.
அது ஏன்?
அது ஏனென்று எனக்கு
இப்போதுதான் புரிந்தது…
நீ
என்னையே
எழுதுகோலாக்கி விட்டிருந்தாய் என்று!
ஏ கவிதையே,
இந்த எழுதுகோல்
உன்னைக் காதலிக்கிறது.
இப்படிக்கு,
எழுதுகோல்.
வாழ்க்கை என்பது ....
15 years ago